பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Tuesday, July 23, 2013

நாடகம் தேவையா?


போலிக் கண்ணீர் வடித்து 
பலர் குடும்பத்தை நடுத் தெருவில்
நிற்க வைக்கும்
நாடகம் தேவையா?

நெஞ்சம் குமுறுகிறது

பகல் முழுவதும் அல்லல் பட்டு 
வீட்டில் சில மணி நேரமே 
ஓய்வெடுக்கும் ஆண்கள் பலர் 
நிம்மதி கெடுத்து 
பணம் சம்பாதிக்கும்
நாடகத்தை பார்த்து நாம் 
எதற்கு அழ வேண்டும்

மனம் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சிகள் பல இருக்க
நம் நிம்மதி சிதைக்க வைக்கும் நாடகம் தேவையா?

பலர் குடும்பம் பிரிய 
குழுவாய் சேர்ந்து நீலிக் கண்ணீர்
வடிக்கும் - நாடகம் தேவையா?

கணக்கிட்டுப் பாருங்கள் பத்து நிமிடத்தில் 
பலர் குடும்ப நிம்மதி கெடுக்கும் 
நாடகம் - ????????????????????

Friday, July 12, 2013

என் அப்பாவிடம் கேட்டேன்...

 

என் அப்பாவிடம் 

 

எனக்கு பிடித்த லட்டு கேட்டேன்...
வாங்கிகொடுத்தார் 

எனக்கு பிடித்த பொம்மை கேட்டேன்...
வாங்கிகொடுத்தார் 

எனக்கு பிடித்த புத்தாடை கேட்டேன்...
வாங்கிகொடுத்தார்  

எனக்கு பிடித்த சைக்கிள் கேட்டேன்...
வாங்கிகொடுத்தார்
 

எனக்கு பிடித்த இரு சக்கர வாகனம் கேட்டேன்...
வாங்கிகொடுத்தார்

இப்படி எல்லாம் வாங்கி கொடுத்த என் அப்பாவிடம் 

எனக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்து வைக்கச் சொன்னேன்.

முடியாது என்று சொல்லி விட்டார்.

என்னோடு சில நிமிடங்கள்(அ)சில நாட்கள் இருக்கும் எனக்கு பிடித்த
எல்லாவற்றையும் வாங்கி கொடுத்த என் அப்பா..........

என் வாழ்நாள் முழுவதும் என்னோடு இருக்கும் எனக்கு பிடித்த
பெண்ணை திருமணம் செய்ய மட்டும் ஏன் மறுக்கிறார்?

அவர் (அ) அவர்கள்  மட்டும் சரி என்று சொல்லி இருந்தால்

பலர்

காதல் திருமணம்  - நிச்சயிக்கப்பட்ட திருமணமாக மாறியிருக்கும். 

Saturday, July 6, 2013

தோழா .........


தோழா .........

நீ இல்லாமல் நேரம் போகவில்லை 

நீ இருந்தால் நேரம் போதவில்லை.......... 



Tuesday, July 2, 2013

பதில் சொல்லுங்கள் பார்போம் ...............

அம்மாவின் இறுதிச் சடங்கிற்கு 

வந்த ஒரு இளைஞனை அக்கா காதலிக்கிறாள்.

இறுதிச் சடங்கிற்கு வந்து சென்ற இளைஞனை(காதலனை)

மணம் முடிக்க நினைத்த அக்கா 

எங்கு தேடியும் அவன் கிடைக்காமல்,

கடைசியில் தன் தங்கையை கொன்று விடுகிறாள்.

ஏன் அவள் தன் தங்கையைக் கொன்றாள்?

ஒரு நேர்முகத் தேர்வில் கேட்க்கப்பட்ட கேள்வி இது ?

பதில் சொல்லுங்கள் பார்போம் ...............


வெ. இறைஅன்பு 

நல்ல கதை



ஒரு சுத்தி 

சின்ன சாவியைப் பார்த்து கேட்டது.

எவ்வளவு தான் அடித்தாலும் என்னால் ஒரு பூட்டை திறக்க முடியவில்லை.

இவ்வளவு சிறியதாக இருக்கும் நீ,

அவ்வளவு பெரிய பூட்டை எளிதாக திறந்து விடுகிறாய். 

அது எப்படி சாத்தியமாகிறது?  என்று கேட்டது.

அதற்கு அந்த சாவி சொன்னது .

நீ வெளியில் இருந்து வேலை செய்கிறாய்.

நான் உள்ளே சென்று வேலை செய்கிறேன்.

அதனால் தான் என்னால் பூட்டை எளிதாக திறக்க முடிகிறது என்று சொன்னது.

எந்த ஒரு பிரச்சனையையும் நாம் மனதின் உள்ளே கொண்டு செல்லும் போது, அதற்கு எளிதில் தீர்வு காண முடிகிறது. 


கதை : வெ . இறைஅன்பு  

  

புதிய தலை முறை - என் வாழ்த்துக்கள்

உத்தரகாண்டில் புதிய தலை முறை


நிகழ்ச்சி மிக அருமை .............


புதிய தலை முறை




உன்னோடு நாங்கள் இருக்கிறோம்


இளைய தலைமுறை 


தொடரட்டும் உன் சமூகப் பணி ...........


புதிய தலை முறை - உன் பணி தொடரட்டும் பல தலைமுறை 


Thiratti.com Tamil Blog Aggregator

அன்பன் தகவல்