பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Friday, May 31, 2013

வெப்பக் காற்று வீசுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை

 

மதுரை, தேனீ , ஊட்டி பகுதிகளில் கனமழை.

 

வெப்பக் காற்று வீசுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை.

 

நான் என்ன சொல்ல வருகிறேன் என்று உங்களுக்கு புரிந்திருக்கும்.

10 ஆம் வகுப்பு வரை தாய் மொழியில் கல்வி கற்போம்

   10 ஆம் வகுப்பு வரை தாய் மொழியில் கல்வி கற்போம்  - அப்துல் கலாம் .

 

   தாய் மொழியில் கல்வி கற்கும் பொழுது தான் புரிந்து படிக்க முடியும்.

 

  ஆங்கிலமும் தேவை தான். அதற்காக தாய் மொழி அழிவதற்கு நாம் காரணமாக இருக்கக் கூடாது.

 

  ஜப்பானியர்  ஒருவர் தமிழ் அறிஞராக இருக்கிறார். நாம் தமிழ் மொழி வேண்டாம் என்கிறோம்.

 

  ஆங்கிலம் ஒரு மொழி தான். தமிழில் படித்து புரிந்து கொண்டால் அதனை எளிதாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கொள்ளலாம்.

 

  ஆங்கிலம் பேசும் சூழலில் ஒரு சில மாதங்கள் இருந்தால் எளிதாக யார் வேண்டுமானாலும் ஆங்கிலம் பேசலாம் . 

 

  எனக்குத் தெரிந்து ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள் சிலர் தமிழிலும் சரியாக எழுத முடியாமல், ஆங்கிலத்திலும் சரியாக எழுத முடியாமல் தவிக்கிறார்கள்.

 

  பெற்றோர்களே  புரிந்து கொள்ளுங்கள். நாம் எல்லோரும் மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்தவர்களா? நாம் அனைவரும் நல்ல நிலையில் இல்லையா?

 

  என் மகனையும் ஆங்கில வழியில் படிக்க வைக்கிறேன் என்று பெருமையாக சொல்லிக் கொண்டால் போதுமா? உங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டாமா?

 

  +2 பாட த்தை இரண்டு வருடம் படிக்க வைத்து 100% தேர்ச்சி என்று சொல்வது பெரிதா? அல்லது +2 பாடத்தை ஒரு வருடம் சொல்லி கொடுத்து 98% தேர்ச்சி கொடுக்கும் அரசு பள்ளிகள் பெரிதா?

 

  படிக்காத மாணவர்களை படிக்க வைத்து தேர்ச்சி பெற வைப்பது தான் பள்ளி. நன்றாக படிக்கும் மாணவர்களை படிக்க வைப்பது பெரிய விஷயமல்ல.

 

படிப்பு படிப்பாக இருக்க வேண்டும். 

வெறுப்பாக இருக்கக் கூடாது.

 

       

Thursday, May 30, 2013

அன்பன் கவிதை தொகுப்புகள்

 

இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள

இங்கே கிளிக் செய்யவும்  

 


ஜாதகம் வேண்டாம்........ சாதிக்க வேண்டும்...............

ஜாதகம் பார்க்க வேண்டாம் 

சாதிக்க நினைத்தால்......... 

ஜாதகம் நம்மை மூடனாக்கும் 

முன்னேற்றத்தைத் தடுக்கும் 

ஜாதகம் - அறிவியல் 

பலித்தது - அந்தக் காலம் 

பணம் பறிக்குது - இந்தக் காலம்

வாழ்க்கையை வீணாக்கதீர்கள்  

ஜாதகம் என்னும் மூட நம்பிக்கையால் 

முன்னோர்கள் அறிவியலால் நடப்பதைச் சரியாக 
கணித்தார்கள் 

நம் வாழ்கையை வளமாக்க..........
 
பின்னவர்கள்  நம் மேல் ஜாதகத்தைத் திணித்தார்கள் 

அவர்கள் வாழ்கையை வளமாக்க ................


ஜாதகம் - முயற்சியின் முதல் தடைக்கல்

குறிப்பு : இது என்னுடைய கருத்து. ஏற்பதும், ஏற்காததும்
 
உங்களைப் பொறுத்து.


Wednesday, May 29, 2013

திறமை - சான்றிதழ்

சான்றிதழ்  இருக்கும் பலரிடம் திறமை இருப்பதில்லை


திறமை இருக்கும் சிலரிடம் சான்றிதழ் இருப்பதில்லை


சான்றிதழ் மட்டும் போதுமா?


திறமை வேண்டாமா?


சான்றிதழ் வேலையில் நுழைவதற்கு.........


திறமை வேலையில் நீடிப்பதற்கு.........


திறமை இருந்தால் வெற்றி!


திறமையும், சான்றிதழும் இருந்தால் 

 

வெற்றி! வெற்றி! வெற்றி!

Tuesday, May 28, 2013

தப்பு - தவறு

தெரிந்து செய்தால் அது - தப்பு


தெரியாமல் செய்தால் அது  - தவறு


தப்பு செய்தால் திருந்துங்கள்.


தவறு செய்தால் திருத்துங்கள்.


உப்புக்குத் தண்ணீர் 


தப்புக்குக் கண்ணீர் 


தப்பும், தவறும் மனித இயல்பு 


திருந்துவதும். திருத்துவதும் மிக மிக நன்று 



Thiratti.com Tamil Blog Aggregator

அன்பன் தகவல்