பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Thursday, April 4, 2013

பகைவனுக்கும் உணவிடுங்கள்

*உடைகளுக்காக நீங்கள் கவலைப்படுவானேன்? வயல்வெளியிலுள்ள லீலி புஷ்பங்கள் எப்படி வளர்கின்றன என்று கருதி பாருங்கள். அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை.


*நேர்மையாளனைக் கடவுள் பரிசோதிக்கிறார். ஆனால், துன்மார்க்கனையும் மூர்க்கத்தனத்தில் மோகமுள்ளவனையுமே அவருடைய உள்ளம் வெறுக்கிறது.


*நேர்மையாளனுக்கு வெளிச்சமும், செம்மையாக நிமிர்ந்த நெஞ்சினருக்காக உற்சாகமும் விதைக்கப்பட்டிருக்கின்றன.


*வெளிச்சத்தில் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு தன் சகோதரனைப் பகைக்கிறவன் இன்னும் இருளிலேயே இருக்கின்றவன் தான்.


*நேசத்தில் பயம் என்பதே இல்லை. பரிபூரணமான நேசம் பயத்தைப் புறம்பாக்கி விடுகிறது. பயம் வேதனையுள்ளது. ஆகையால் பயப்படுகிறவன் நேசத்துக்குப் பூரணமானவல்ல.


*உன் பகைவன் பசித்திருந்தால் உணவிடு. அவன் தாகத்தோடிருந்தால் பானம் கொடு. இவ்வாறு செய்வதினால் அவன் தலைமீது நெருப்புத்தணலைக் குவிப்பவனாவாய்.

                                            - பைபிள் பொன்மொழிகள்

1 comment:

  1. ஒவ்வொருவரும் உணர வேண்டிய பொன்மொழிகள்...

    வாழ்த்துக்கள்... நன்றி..

    ReplyDelete

Thiratti.com Tamil Blog Aggregator

அன்பன் தகவல்