பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Thursday, April 4, 2013

பிறருக்கு உதவுவதே நம் கடமை

   ஒருவருக்கும் உதவி செய்யவில்லை என்றால் சேவை செய்யலாம். அதன் மூலம் ஆண்டவனுக்கு தொண்டு செய்தவனாகிறாய்.

 

     நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை, பிறருக்கு உதவி புரிவதும் உலகிற்கு நன்மை செய்வதுமாகும்.


   அறிவாற்றலைப் பயன்படுத்தாமல், கண்மூடித்தனமாக கடவுளை நம்புகிறவனை விட, தன்னுடைய பகுத்தறிவை பயன்படுத்தி கடவுளை நம்பாமலிருக்கும் ஒருவனுக்கு மன்னிப்பு கிடைத்து விடும்.


   வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் தேவை. இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருக்க வேண்டும்.


    மக்களுக்கு அவர்களுடைய தெய்வீகத்தன்மையை போதிப்பதும், வாழ்க்கையின் ஒவ்வொரு இயக்கத்திலும் அதை எப்படி வெளிப்படுத்துவது என்று சுட்டிக்காட்டுவதுமே நமது லட்சியமாக இருக்க வேண்டும்.


   நமது வாழ்க்கை சிறந்ததாகவும், தூய்மையானதாகவும் இருந்தால் தான் உலகம் சிறப்பும் தூய்மையும் பெறும். அதற்காக நம்மை நாம் முதலில் தூய்மைப்படுத்திக் கொள்வதுடன், பரிபூரணமாக்கிக்கொள்ளவேண்டும்.

1 comment:

  1. /// நம்மை நாம் முதலில் தூய்மைப்படுத்திக் கொள்வது ///

    அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete

Thiratti.com Tamil Blog Aggregator

அன்பன் தகவல்